Friday 12 June 2015



அவர்களை தவிர்க்கலாம்;
தண்டிப்பை தகர்கலாம்;
வலியால் துவண்டு போகலாம்;
மறக்க மறுத்தாலும்
நினைப்பதை நிறுத்தலாம்;
தண்டிக்கலாம்
தண்டித்துக்கொள்ளலாம்;
ஞாயபகத்தை நிராகரிக்கலாம்
மணதை மறுத்து
ம(இ)ருமனதோடு மாறலாம்;
புலம்பலை புதைத்து
புன்னகையை போர்வையாக்கி
வாழ பழகலாம்;
வாழ்க்கையும் நகரலாம்;
ஆயிரம் மாற்றங்கள் நடந்தாலும்
ஆயிரம் ஆயிரமாய் இன்பம் பெறுத்தாலும்;

குடிலுக்குள் ஓழிந்த
குட்டி பூணை போல்;
மனதில் மூளையில்,
மெல்லிய ஓரத்தில்,
ஓர் நினைவு,
ஓர் வலி,

" என்ன ஆயினும் எனக்கு கிடைக்காத ஒன்றாய் நிலைத்து விட்டாயே.. "
என நினைக்கும் போதே 
ஓர் சொட்டு கண்ணீருடன்
கண்ணைத் தோட்டு
பிரிகின்றது,
அந்த நினைவுகளும், வலிகளும் !!!

-----பிரிந்த கண்ணீருடன் ஷ்ருதி
 — 

No comments:

Post a Comment