Friday 12 June 2015

தமயருக்கும் தங்கைக்கும் கிடைத்த 
தங்க பொக்கிஷம் நீ !!

தோழமையோடு தொடுத்ததால் 
உன்னை தோழி எனவா ?? 

அக்கரையால் ஆச்சரியப்படுத்துவதால் 
அசிரீரி எனவா ??

ஆங்காங்கே கண்டிப்பதால்
ஆசான் எனவா??

தாய்மையோடு தாங்குவதால்
உன்னை தாயெனவா ???

எத்தனை எத்தனை பொருப்புகள்
கொண்ட உறவு நீ !!

உன் உணர்ச்சிகளை
உன்னுள் உரயவைத்து
மற்றவர்களுக்காக மறைத்து
மகிழ்ச்சி என்னும் மழையை
மனைக்கு பொழிந்த
மகாலக்க்ஷ்மி நீ !!

திகட்டாத திறமையும் ,
தடைகள் அனைத்தும்
தகற்க்கும் தைரியத்தையும்
கொண்டு திகழும் திலகாவதி நீ !!

சந்தோஷத்தை சபைக்கும் ,
கோபத்தை கண்ணாடிக்கும்
துறக்கும் தைரியசாலி நீ !!

சிப்பிக்குள் இருக்கும்
சிறு அதிசயமென முத்தையும்;
பாலை போல்
கலங்கபடாத பண்பையும் ;
மல்லிகை போல்
மாளிகை தோறும்
மனம் வீசும் மணதையும் ;
எஙகள் வீட்டில்
ஓளிவூட்டும் வைடுரியத்தையும்;
ஒன்று சேர்த்து
செல்வங்கள் அனைத்தும்
செழித்தோங்கும்
செல்வியென திரு "தமிழ் செல்வி"யை
கால்யாணம் என்னும் களத்தில்
விதைநெல்லென விதைக்கின்றோம் ;

காலத்தையும் கடந்து விலைச்சல்
மிகுந்த பயிராக வாழ
மனமாற்ந்து வாழ்த்துகிறோம் !!

---ஷ்ருதி--
கவிதைகளுடன் நான் !!!



No comments:

Post a Comment