Tuesday 16 June 2015



தோழனுக்காக தோழமையோடு !!!

தோழா என்று அழைத்தேன்
தோழமை பிறந்தது
நண்பா என்று அழைத்தேன்
நம்பிக்கை மலர்ந்தது..

என் அழுகாச்சி கண்ணீரையும்
நீ
ஆனந்தக் கண்ணீராய்
மாற்றினாய்

சற்றும் சஞ்சலம் இல்லாமல்
இருக்கும் நட்பு...
வியப்பு..

நம் பயில வந்த
வகுப்பறை பயின்றது
நம் தூய்மையான நட்பை...

கடவளிடம் மேஜைகளும்
யாசிக்கின்றன
நம் நட்பு
வாணம் போல்
நீண்டு வாழி...

அய்யகோ..
தமிழ் மொழி தவிக்கிறது
நம் நட்பை
"நட்பு" என்னும் மூன்று
எழுத்தால் விவரிக்க
முடியவில்லை என்று....

கல்லூரி சிநேகம்
காலமெல்லாம் என்பர்...
நம் சிநேகம்
காலத்தையும் தாண்டும்
என்ற நம்பிகையோடு....

-----ஷ்ருதி----
[[கவிதைகளோடு நான்]]

No comments:

Post a Comment