கண்களின் நீரோட்டங்கள்
கவலைகளை கரைசேர்ப்பதில்லை...
சில வலிமையான போராட்டங்களே
வழிகளை தேடி தருகின்றன...
விட்டுச்சென்ற கறையை
விதியென்று வெந்து போகாமல்
மதி இருக்கும் வரை
மடியாமல் வாழ்வேன்
என மாற்தட்டி கூறுங்கள்...
மேல் விழுந்த கறையும்
மெல்லக் கரையும் !!
--- ஷ்ருதி---
கவிதைகளுடன் நான்